Friday, December 23, 2016

பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை

என்னுடைய பேச்சுலர் வாழ்க்கை காலத்தில் தமிழ் சினிமாவின் ஒரு யுவ நடிகையின்  தீவிர ரசிகனாக நான் இருந்தேன். அந்த சமயத்தில் சென்னையின் பிரபலாமான காலேஜில் படித்து கொண்டிருந்தார் அந்த நடிகை

என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் இந்த நடிகை மீதுள்ள என்னுடைய ஆராதனை குறித்து தெரியும், அப்படி இருக்கும் போது தான் ஒரு நெருங்கிய நண்பன் ரூமில் வந்து என்னிடம் சொல்கிறான்...,

“டேய், நானொரு விஷயம் சொல்வேன், சொன்னால் நீ நம்ப மாட்டாய்...”

“சொல்லு என்ன விஷயம்..?”

“உன்னுடைய அந்த சினிமா நடிகை இருக்கா...ள [பெயர்], அவளுடைய இரண்டு பிரெண்டுஸ் நேற்றைக்கு பெங்களூரில் வந்திருந்தார்கள்....”

“அதுக்கு..?” நான் கேட்டேன்.

“ஆம், இனி தான் நீ அதிர்ச்சி அடைய போற, இந்த இரண்டு தோழிகளையும் கூட்டி கொண்டு நான் நேற்றைக்கு பப்-யில் போனேன்..”

“போடா...”

இவன் லூசுதனமா ஏதோ உளறுகிறான் என்று தான் நான் சந்தேங்கப்பட்டேன். ஆனால் சம்பவம் உண்மையாக தான் இருந்தது. அதை அறிந்து நான் தளர்ந்து போனேன்.

இனி அந்த குறிப்பிட்ட சம்பவத்தை விவரிக்கிறேன். அதே ஆண்டில் அந்த காலேஜ்லிருந்து பெங்களூருக்கு தான் ஸ்டடி டூர்/ எக்ஸ்கர்ஷன் ப்ளான் செய்தது. நம்முடைய நாயகி ஷூட்டிங் காரணமாக இருக்கலாம் இந்த டூரில் இல்லை. ஆனால் இந்த டிரிப்பில் இருந்த அவளுடைய இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு வாழ்வில் ஒரு முறையாவது பெங்களூரிலே பப்களில் செல்ல வேண்டும் என்ற அப்பட்டமான விருப்பமிருந்தது.

(இன்று இந்தியாவிலே மிக்க நகரங்களும் நியூ ஜெனரேஷன் விஷயத்தில் ரொம்பவே முன்னேறி உள்ளது, ஆனால் அன்று பெங்களூரில் தான் பப் கலாச்சாரத்தின் தலைநகரமாக இருந்தது தென் இந்தியாவில்.)

அப்போது இவர்களில் ஒருத்திக்கு என்னுடைய நண்பனின் கம்பெனியில் வேலை செய்கின்ற ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருடன் சின்னதாக ஒரு லைன் இருந்தது. அவள் இதை பற்றி அவனிடம் நினைவு படுத்திஇருந்தாள், அதற்கு அவன் முயற்சிப்பதாகவும் சொல்லியிருந்தான். அவன் பார்த்த போது அவனுக்கு தெரிந்தவர்களில் கார் உள்ளவனும் இந்த விஷயமெல்லாம் சொல்லக்கூடியவனாக என்னுடைய இந்த நண்பனை மட்டுமே அவனுக்கு கிடைத்தான். அவன் உடனே என் நண்பனிடம் ஒரு டீல் வைத்தான். அதாவது அவன் அவனுடைய லவ்வரிடம் காதல் செய்யும் போது இரண்டாவது பெண்னுடன் நண்பன் லைன் அடிக்கலாம்.

அப்படி அவர்கள் சம்பவத்தை பிளான் செய்தனர். பெங்களூரில் வந்து சேர்ந்தவுடன் சங்கத்தில் இருந்து இரண்டு – இரண்டரை மணி நேரத்திற்கு ஆண்டியை பார்பதற்காக என்றோ அல்லது அது போன்றோ சொல்லி அங்கிருந்து நழுவுவதற்கான பெர்மிஷனை இந்த பெண் உண்டாக்கி எடுத்து வைத்திருக்கிறாள். இந்த நேரத்திற்குள் அவர்களை பிக்கு செய்து பப்பில் ஏற்றி திரும்ப கொண்டு போய் விட வேண்டும் என்பது தான் டாஸ்க்.

ஏதானாலும் இந்த பொறுப்பை எல்லாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்த பிறகு தான் இவன் நம் முன்பில் வந்து நின்று சிரிப்பது.

“முதல்ல அந்த பெண்களுக்கு கொஞ்சம் அங்கலாப்பு இருந்தது, பிறகு ஒரு பியர் ஷேர் செய்து குடித்தனர். அதற்கு அப்புறம் தான் நல்ல ஜாலியாக இருந்தது அவர்களுடன் பேசி பழகுவதற்கு..”

அவனுடைய வர்ணனையை கேட்டு நான் கூடுதல் டெஸ்ப்பானேன். இல்லாவிட்டாலும் கொஞ்சம் குடித்த பிறகு பெண்கள் அவர்களுடைய சகஜமான சுபாவத்திலிருந்து மாறி கொஞ்சம் பிட்ச்னஸாயி பேசுவார்கள் என்று நான் கேட்டிருக்கிறேன். அப்படி என்றால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் அந்த சமயம். அதும் சினிமா நடிகையின் நெருங்கிய தோழிகளுடன். மொத்தத்தில் கட்டுப்பாட்டை மீறிய நான் நண்பனிடம் கடுமையாக பரிபவித்தேன்.

“உனக்கு என்னையும் கூட கூப்பிட்டிருக்கலாம் இல்ல, நான் எதிர் டேபிளில் ஆவது உட்கார்ந்திருப்பேனே.”

“அது எப்படி டா, நீயே சொல்லு. நானே அவன் கூப்பிட்டு போனேன்” நண்பன் தன்னுடைய இயலாமையை தெளிவாக்கினான்.

“இனியும் வருவாங்களா அவங்க..?” நான் கேட்டேன்.

“அப்படி தான் நினைக்கிறேன். இந்த முறை வேற பாட்ச்சில் உள்ளவர்களும் பெங்களூருக்கு தான் டூர் வேணும்னு கேட்டிருக்கிறார்களாம். “

“அப்படின்னா அடுத்த முறை நீ என்னையும் கூப்பிடனும்...” நான் முன்கூட்டியே சொல்லி வைத்தேன்.

“சரி” என்று அவனும் சம்மதித்தான்.

ஆனால் அந்த சம்மதத்தில் எந்த ஒரு உறுதியும் இல்லாதது போல் எனக்கு தோணியது. அடுத்த முறை என்னை கூப்பிடுவது போயிட்டு இந்த விஷயத்தை குறித்து அவன் சொல்ல கூட போறதில்லை. இனி வேற என்ன தான் இதற்கு ஒரு வழி..? நண்பன் போன பிறகு நான் தலைகொடைந்து அடிமுடி ஆலோசிக்க தொடங்கினேன். கடைசியில் இரவில் நான் அந்த பெண்களின் பெயரில் காலேஜிற்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று தீருமானித்தேன். உள்ளடக்கம் ஏறத்தாழ இப்படியாக இருந்தது.

To

X, Y

பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை,

பிரபல காலேஜ், சென்னை

பிரியமுள்ள X, Y என்கிறவங்க தெரிந்து கொள்வதற்கு,

        நீங்கள் சென்ற வாரம் பெங்களூருக்கு எக்ஸ்கர்ஷன் வந்திருந்த போது டூரின் இடையில் என்னுடைய நண்பர்களுடன் பப் விஜயம் செய்ததும், பியர் குடிச்சதும் எல்லாம் அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். உண்மையில் அன்று உங்களுடன் சேர முடியாத ஒரு துரதிஷ்டசாலி தான் நான்.

     ஆனால் பரவாயில்லை. இனியும் பெங்களூருக்கு உங்களுடைய பிரெண்ட்ஸ் ஸ்டடி டூருக்கு வருகிறார்கள் என்று சொன்னீர்களே, அது பிரகாரம் இனி வருகின்ற பாட்ச்களிலே எந்த பெண்களுக்காவது பப்கள் பார்பதற்கோ, பியர் குடிப்பதற்கோ மும்முரமான ஆசை இருக்கு எனில் சிறிதும் தயங்காமல் என்னை காண்டாக்ட் செய்ய கோரிக்கை விடுகிறேன். மிகுந்த ஜாக்கிரதையுடன் உங்களை திரும்ப சேர்ப்பேன் என்ற உறுதி நல்கி கொண்டு நான் நிறுத்துகிறேன்.

“ஸ்ரீ ராம ஜெயம்”

என்னை காண்டாக்ட் செய்ய வேண்டிய எண்/ இமெயில்

போன் :  .............

மெயில் : ............

விசுவாசத்துடன்,

(பெயர்)

கையொப்பம்

காலையிலேயே இந்த கடிதத்தை போஸ்ட் செய்ததும் மனதிற்கு சிறியதாக ஒரு ஆசுவாசமானது. எதுவானாலும் நாம செய்ய வேண்டியதை செய்தாச்சு. பிறகு நான் அதை குறித்து மறந்தே போனேன்.

நான்கு – ஐந்து நாள் முடிந்திருக்கும் கம்பெனியில் இருக்கும் போது நண்பனின் போன் வந்தது. எடுத்த போதே அவன் கெட்ட வார்த்தைகளால் கடிந்து கொண்டான், அதை கேட்டு என்னுடைய  செவிகள் புளித்து போயின.
“என்னடா ..?” நான்  பதற்றத்துடன் கேட்டேன்.

“டேய் ------------, நீ அந்த காலேஜுக்கு கடிதம் எழுதினியா..., எக்ஸ்கர்ஷன் வறுகின்ற பெண்களை பப் காண்பிக்க நீ தயாராக இருக்கிறேன் சொல்லி...?”

“ஆமாம், ஒரு துர்பல நிமிஷத்தில் நான் அப்படி எழுதிவிட்டேன், என்னடா பிரச்சனை...?”

“பிரச்சனை..., இனி ஒன்னும் உண்டாக பாக்கி இல்லை. உன்னுடைய பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை அட்ரஸ் பார்த்த உடனே அங்கெ உள்ள பெண்கள் எல்லாம் கடிதத்தை திறந்து படிச்சுட்டாங்க. இந்த பெண்கள் பப்பில் வந்து பியர் குடிச்சது எல்லாம் அங்கெ மொத்தம் டமாரமா பரவியாச்சு. ஆசிரியர்களை மட்டும் நம்பி பெண்களை டூருக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு இது சகிக்குமா, அவங்க காலேஜுக்கு வந்து ஒரே பிரச்சனை பண்ணியிருக்காங்க. ஆசிரியரிகள் இப்போ அங்கெ அச்சடக்க நடவடிக்கை நேரிட்டு கொண்டிருக்கிறாங்க, இந்த பெண்களுக்கோ சஸ்பென்ஷனும்.”

ஒரு நிமிடம் நிறுத்தி அவன் தொடர்ந்தான்...

“அது போததுனு, இங்கே ஒருத்தன் அவனுடைய லைன் உடைந்த வருத்தத்தில் என்ன கூப்பிடுகிற கெட்ட வார்த்தைகள் காலையிலிருந்து என்னுடைய இந்த இரண்டு காதுகளும் மாத்தி மாத்தி கேட்டுகிட்டிருக்கிறேன்...  நீ தற்காலம் கொஞ்சம் இடத்தை மாத்திக்கோ, உன்னை அவன் கம்பெனியில் வந்து அடிக்கனும்னு தான் சொல்றான். நான் அங்கெ வரல, வந்தால் நானும் உன்னை அடிச்சு போயிடுவேன், அதனால தான்..”

அவன் போனை வைத்தான்.

அய்யோ, இவ்வளவு பிரச்சனை நான் நிஜமா நினைச்சு கூட பார்க்கவில்லை. மற்றவன் கம்பெனியில் வந்து நம்பளை அடித்தால் மொத்தத்தில் நாறிடும், மட்டுமில்ல நியாயம் அவனுடைய பக்கமும் தான். நான் அதனால் ஒரு அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ரூமில் போயி இருந்தேன்.

சாயங்காலம் ஆனபோது வெளியில் என்னுடைய நண்பனின் புல்லட் சப்தம் கேட்டேன், ஆபாச வார்த்தைகளை கேட்டு காது பழுத்து வருகின்ற வழி இது, இனி இவன் ஒரு வேளை நம்பளை ....நான் சந்தேகித்தேன், நான் அவனை தூரத்திலிருந்து பார்த்த போதே இன்று கபாலீசுவரன் சொன்ன டயலாக்கை நான் அன்றே சொன்னேன்.

“மகிழ்ச்சி...”

ஆனால் பல பேருக்கு ஒரேயடியாக மகிழ்ச்சி கொடுத்த என்னை பார்த்து அவன் சிரிக்க மட்டுமே செய்தான்...
                                        ****************

Hi Friends, I have written 20 similar funny stories and made it as a free android app. If you like this story please download the app from google store . Click the below app Link to install from the store. 

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



.

Thursday, December 22, 2016

சல்சா

சாதாரணமாக எனக்கு பெண்களிடம் பேசுவது என்பது அவ்வளவு பெரிய பிரச்சனை உள்ள விஷயம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நமக்கு பிடித்த ஒரு பெண் குறுக்குசந்தில் எதிரே வரும் போது என்னுடைய இதய துடிப்பு அதிகரிக்கும், குரல் பதற்றம் அடைய தொடங்கும்.

இது என்னை நிரந்திரமாக அலட்ட தொடங்கிய போது நான் எங்களுடைய பகுதியில் உள்ள ஒரு கில்லாடியின் உதவியை நாடினேன். பிறகு அவனிடம் பணிவாக கோரினேன்,

“என்னை உங்கள் சிஷ்யனாக ஏத்துக்கனும், இந்த பெண்களை வசிகரிக்கும் முறையை எனக்கு கொஞ்சம் சொல்லி தரனும்.”

அவன் மிகவும் எளிதானது போல் சொன்னான். “டேய், இதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. நீ நேராக போய் அந்த பெண்ணிடம் “செல்லம்” என்ற கூப்பிட்டு பேச தொடங்கு.”

‘செல்லமா’ அதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்னவோ நாவல், கதைகள் எல்லாம் இருக்கிற மாதிரி. நான் சந்தேகத்துடன் நின்றேன்.

“பின்ன காலை முதல் மாலை வரை குமுதம், குங்குமம் கதைகள் படிச்சுகிட்டு இருக்கிற இவங்கள வேற என்னனு கூப்பிட...? ஒரு வேலை செய், நீ கொஞ்ச நேரம் என் கூட உட்காரு...” அவன் அழைத்தான்.

அப்படி நாங்கள் இருவரும் குறுக்குசந்தில் இருக்கின்ற ஒரு சுற்றுச் சவர்மீது ஏறி அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு, ஒரு பெண் அந்த வழியாக வந்தாள். அவள் அருகில் வந்த போது இவன், “என்ன செல்லம், நம்பளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறயே இப்போ...” என்று கேட்டான். நிஜம்..!, அந்த பெண் கொஞ்சம் வெட்கப்பட்டாள், பிறகு எங்களை கடந்து சென்றாள்.

நான் ஒப்புக்கொண்டேன். இது ஒரு திறமை தான். என்ன சொல்கிறோம் என்பதில் இல்லை விஷயம், எப்படி சொல்கிறோம் என்பதில் தான். சொல்ல நினைத்ததை சொல்ல வேண்டியது போல் சொன்னால் பெண்களை கவர முடியும் என்பது எனக்கு உறுதியானது. ஆனால் என்ன செய்ய, என்னால் இப்படி எல்லாம் ஹெட் செய்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஒருநாளும் இருந்ததில்லை.

சிறிது காலங்களுக்கு பிறகு நான் பெங்களூரில் வந்து சேர்ந்த போதும் இதே பிரச்சனை என்னை விடாமல் பின்தொடர்ந்தது. ஆனால் அதற்குள் யாஹூ மெஸ்சென்ஜெர், MIRC என்பது போன்ற சாட் அப்பிளிக்கேஷன்கள் உதவிக்கு வந்திருந்தது. காரணம் இவை இருக்கும் போது முதலில் நேடியாக பேச வேண்டியதில்லையே. இருந்தாலும் பெரும்பாலான சாட் பெண்களை நேரடியாக பார்க்க போகின்ற ஒவ்வொரு முறையும் ஒரு பேரிடராகவே முடிந்தது.

பார்க்க அழகான ஒரு பெண்னிற்கு சாட் ரூமில் அடையிருக்க வேண்டிய தேவையில்லையே என்ற எளிமையான உண்மையை நான் மறந்திருந்தேன். இருப்பினும் எதிர்பார்ப்பை கைவிடாமல் நான் என்னுடைய முயற்ச்சியை தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

கிட்டதட்ட சமமான முறையிலேயே இறை பிடிப்பதற்கு முயற்சிக்கின்ற ஒருவனையே எனக்கு ரூம்மேட்டாக கிடைத்தான். அவன் ஒரு முறை என்னிடம் சொன்னான்,

“டேய், இந்த சாட்டிங் கொண்டு மட்டும் காரியமில்லை. என் கையில் மற்றொரு ஐடியா கூட இருக்கு. ஆனால் சொஞ்சம் துட்டு இறக்கணும். “

அன்று வேலையில் பிரவேசித்து இருந்ததினால் பணம் ஒரு பிரச்சனையாக இல்லை எங்களுக்கு.

“இறக்கலாம், ஐடியா என்ன...”

அவன் நாடகியமாக சொன்னான்.

“சல்சா....”

“சல்சாவா...”

“ஆமாம்” அவன் தொடர்ந்தான்...

“அதாவது இந்த ஆண்ணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நின்று டான்ஸ் செய்கின்ற ஒரு மெக்சிகேன் கலைவடிவம்  தான்  இந்த சல்சா..,

நாம எல்லாம் இப்படி சாட் செய்து நேரத்தை வீணாக்குவதை விட ஒரு பெண் நம்மிடம் வந்து டான்ஸ் செய்ய அழைப்பதை கொஞ்சம் யோசித்து பாரு...”

ஈஸ்வரா, நான் நமித்துக் கொண்டேன். நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ஆனால் என்னால் அவனுடன் இனைந்து சேர முடியவில்லை. ப்ராஜெக்ட் ரிலீஸிங் தேதி நெருங்கியதன் காரணத்தால் வர்க் லோட் அதிகமாக இருந்தது கம்பெனியில். ஒன்று இரண்டு மாதங்களுக்கு கம்பெனியிலிருந்து வேலை முடித்து சீக்கிரம் இறங்குவது என்பது நடக்காத காரியம். அவனுக்கு என்றால் ஆபீஸின் அருகில் தான் இந்த டான்ஸ் சென்டர். அப்படி நான் கொஞ்சம் வெயிட் செய்தேன், மட்டுமல்ல அபிப்பிராயமும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா.

ஒன்று இரண்டு நாள் ஆகியிருக்கும், அவன் நல்ல சூப்பர் அபிப்பிராயம் தான் நல்கினான். நாட்கள் அதிகமாகும் தோறும் பெண்களுடன் அவன் வைக்கின்ற ஸ்டெப்களின் வர்ணனைகளை கேட்டு கேட்டு எனக்கு என்னோட கட்டுப்பாடு நஷ்டமாக தொடங்கியது. ஆனால் இதை கேட்டிருப்பதை தவிர வேறு வழி ஒன்றும் இல்லாத  ஒரு நிலைமையும்.

அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் எனக்கு சீக்கிரம் வீட்டிற்கு வர முடிந்தது. அதற்குள் நண்பன் டான்ஸ் கிளாஸிற்கு சென்றிருந்தான். நானும்

 அப்போது ரூமிலிருந்த வேறொரு நண்பனும் சேர்ந்து சல்சா சென்டருக்கு போக தீருமானித்தோம்.

முதலில் நாங்கள் அங்கு சென்ற நண்பனை போனில் அழைக்கலாம் என்று நினைத்தோம், பிறகு அது வேண்டாம் என்று வைத்தோம். ஒரு சர்ப்ரைஸ் ஆகட்டும். அப்படி நாங்கள் டான்ஸ் சென்டரில் வந்தடைந்தோம்.

நாங்கள் புதியதாக சேர்ந்து கொள்ள வந்தவர்கள் என்று சொன்ன போது மா’னேஜர் எங்களை மனதார் வரவேற்று, பிறகு சல்சாவின் குணநலன்களை குறித்து விவரிக்க தொடங்கினார். அதற்கு பிறகு எங்களை டான்ஸ் ப்ளோருக்கு அழைத்து சென்றார்.

நான் பார்த்த போது ஒரு பதினைந்து பையன்களும் இரண்டு நூலு போல பெண்களும் அங்கெ இருந்தனர். இவ்வளவு கோம்படிஷன் என்றால் இங்கே வரவேண்டிய தேவை என்ன, ரோட்டில் நின்றால் போதுமே என்று நான் சிந்தித்தேன். அது மட்டுமில்லை, இந்த இரண்டு பெண்களும் சென்டரை சேர்ந்தவர்களோ என்ற சந்தேகமும் உண்டானது. நம்ம நண்பன் தினமும் சொல்கின்ற வர்ணனைபடி மனதில் செய்து வைத்த இமாஜினேஷன் இப்படி ஒன்றும் இருக்கவில்லை.

நான் மற்றொரு ரூமில் ஏற்றி பார்த்தேன். பெண்கள் மட்டும் பயிற்சி செய்கிறார்கள் அங்கெ. ஒரு லேடி இன்ச்டரக்டரும் இருந்தார். எனக்கு ஓரளவிற்கு அங்கு நடக்கின்ற நிகழ்சிகளின் செயல்முறைகள் புரிய தொடங்கியது. ஆனால் நம்முடைய மச்சானை மட்டும் இந்த கூட்டத்தில் எங்கும் காணவில்லை.

நான் விரிவாக உலவியபோது அதோ கூட்டத்திலிருந்து அகன்று தூரே டாய்லட்டின் அருகில் நின்று ஒருத்தன் டான்ஸின் சில கோஷ்டிகளை காண்பித்து கொண்டிருக்கிறான். அதிர்ஷ்டவசமாக அவன் எங்களை பார்க்கவில்லை. நான் நண்பனை சுட்டி காண்பித்து மானேஜரிடம் கேட்டேன்..

“இது என்ன அவன் மட்டும் தனியா நின்று டான்ஸ் செய்யறான்...?”

“அதுவா, அவன் நேற்றைக்கு தான் சேர்ந்திருக்கிறான். அதாவது இந்த சல்சாவின் பேசிக் ஸ்டேப்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் உடன் நிற்கின்ற பார்ட்னரின் காலில் மிதித்து கொண்டிருப்போம். அப்போ அது வரைக்கும் தனியா பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்தோம். அப்போ கடைசி ஒரு மாத காலமா தனியா கதியில்லாம டான்ஸ் செய்து கொண்டிருக்கான் இவன். அப்புறம் ரூமில் வந்து சுத்தற ரீல் கேட்டா, இதோ சமீபத்தில் போன ஒரு நாள் கூட டான்ஸ் செய்த பெண்ணின் கழுத்தில் முத்தம் கொடுத்தது வரை ஆச்சு. நாங்கள் அப்போதே அந்த இடத்திலிருந்து ஸ்கூட்டாகினோம். நேரே ரூமிற்கு சென்று நிலத்தில் விரித்திருந்த படுக்கையில் காலை நீட்டிக் கொண்டு டி.வி. காண ஆரம்பித்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு என்னுடைய நண்பன் ப்ரேமம் சினிமாவில் உள்ள டான்ஸ் மாஸ்டரை போன்று சில ஸ்டேப்கள் போட்டுக் கொண்டு உள்ளே வந்தான். நாங்கள் கவனிக்காமல் இருந்த போது அவன் பேச தொடங்கினான்..

“ஏய் மச்சி, இன்னிக்கு என்னாச்சு தெரியுமா..? ஒரு பொன்னு சேர்ந்து நின்னு டான்ஸ் செய்திட்டு, ஹோ, அவளுடைய தலைமுடியுடைய ஒரு மணம் இருக்கே..தாங்க முடியலை..”

“அப்படின்னா நீ அவகிட்டே முடியை ஏதாவது பினாயில் போட்டு கழுவ சொல்லறது தானே, நாற்றம் போகும்.” நாங்கள் படுத்து கொண்டே சொன்னோம்.

அவன் சற்றே அதிர்ந்தான்.”யே..”

நான் தொடர்ந்தேன், “ டேய் துரோகி, நீயோ மாட்டிகிட்டே. இனி என்னோட பணத்தை கூட கொண்டு போய் தொலைக்கணும் தானே நீ இங்கே வந்து இவ்வளவெல்லாம் டிராமா செய்தது..”

அவன் படுக்கையில் முட்டிக்காலில் நின்று சொன்னான்,

“சத்தியம் டா, நான் மூனு மாசம் பீசை முதலேயே கொடுத்துட்டேன் ... “
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கிட்டும் இங்கிட்டும் ஒருத்தருக்கு ஒருத்தர் கால்லை வாரி விட்டு கிட்டிருந்தாலும் அது நல்ல அற்புதமான ஒரு பேச்சுலர் காலம்.

அதிகம் தாமதமின்றி மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்து புதிய திட்டங்களை ஆலோசிக்க தொடங்கினோம். எப்படியாவது ஒரு இறையை (இனக்கிளியை) பெறுவது தான் எங்களின் அன்றைய குறிக்கோள். 

                                                                        *************
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason






Monday, December 19, 2016

வாய்ப்பு வந்து கதவை தட்டும்போது


நான் பெங்களூரில் இன்ஜினியரிங் படிக்கும் போது ஷர்ம, இந்திரா போன்ற பஸ்களில் தான் விடுமுறை நாட்களில் சாதாரணமாக என் கிராமத்திற்கு பயணம் செய்வேன். ஒவ்வொரு முறையும் பஸ்சில் ஏறும்பொழுது என்னுடைய அருகில் ஒரு அழகான பெண் பயணம் செய்யவேண்டும் என்று மனதால் விரும்பபுவேன். ஆனால் அது என்றும் ஒரு விருப்பமாகவே மிஞ்சியது.

எனினும் என் நண்பர்களுக்கிடையில் பார்த்தால் ட்ரைன் எக்ஸ்பெர்ட், பஸ் எக்ஸ்பெர்ட் போன்று விதவிதமான வகையினங்களே இருந்தனர். விடுமுறை முடிந்து வரும் அவர்களுடைய பஸ் கதைகள் கேட்டு கேட்டு வாயில் வரும் உமிழ்நீரை இறக்குவது மட்டும் தான் என்னுடைய விதி என்றாகிவிட்டது. 

ஒரு முறை கதையை கேட்டு கட்டுப்பாட்டை மீறிய நான் என்னியாரியாமல் அவனிடம் கேட்டேன்,

 “எப்படிடா... உங்களுக்கு மட்டும் இப்படி  எல்லாம் அமையுது..?”.

அதுக்கு அவர்கள்...” லக் மட்டும் போதாது ., கட்ஸ்சுங்க்கிற சங்கதி கூட வேணும்....”

அவனுடைய அந்த வார்த்தைகள் என்னுடைய இதயத்தை தான் துளைத்தது..!!! . நமக்கு ஆண்மையில்லை என்று தானே அவன் சொல்ல வந்தது. வரட்டும், தக்க சமயம் வரும். அதுவரை காத்திருப்போம். நானும் மனதில் உறுதி கொண்டேன்.

சில நாட்கள் கடந்தன. நான் பெங்களூரில் ஒரு சிறிய கம்பெனியில் சாப்ட்வேர் டிரெய்னியாக வேலையில் சேர்ந்தேன். ‘மடிவாளா’ என்ற இடத்தில குடியிருக்கவும் தொடங்கினேன். 



வெள்ளிக்கிழமைகளில் ஊருக்கு போவதற்காக பேருந்து நிலையத்தில் நிற்கின்ற அழகிகளை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது, முன்பு என் மனதில் உறைந்து  டந்திருந்த மோகங்கள் நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்க தொடங்கினேன்.

அனால் லக்கை மட்டும் நம்பி இருந்தால் நாம இப்படியே இருக்க வேண்டியிருக்கும் ....காரியம் நடக்க வேண்டும் என்றால் பலன் தறக்கூடிய திட்டங்கள் தேவை.

அந்நாட்களில் எனக்கு பஸ் புக்கிங் ஆபீசில் ஒரு பையனை கொஞ்சம் தெரியும். முதற்படியாக அந்த நட்பை வளர்த்தேன். அவ்வாலிப வயதில் வார இறுதியில் ஒன்று கூடும் பீர் பார்ட்டிகளில் புதிய நண்பனையும் அழைக்கும் அளவிற்கு நட்பை உயர்த்தினேன்.

ஒரு நாள் பார்ட்டி வேளையில், அனுகூலமான சந்தர்பத்தில் என்னுடைய கோரிக்கையை அவனிடம் தெரிவித்தேன். அவனும் சிறிது யோசித்து பிறகு,

“சங்கதி நடக்கும்..., அனால் கயத்து மேல நடக்கிற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். ஒரு வேளை பாதிராத்திரி அந்த பொண்ணு கத்தி கதறி ஊரை கூட்டிச்சுன்னா உன்னை நடுரோட்டில இறக்கிவிட்டு போயிகிட்டே இருப்பாங்க....” நண்பன் எச்சரித்தான்.

“எங்கே, இவனோட அவசரத்துக்கு இது ஒண்ணும் நடக்க போறதில்ல.. இதெல்லாம் ரொம்ப நாசூக்காக செய்ய வேண்டிய விஷயம்...” மிச்சர் வாரி தின்று கொண்டிருந்த என்னை பார்த்து வேறாரு நண்பன் சொன்னான். (இல்லாட்டாலும் பீர் குடிக்கும் போது சைட் டிஷ் அதிகமாக சாப்பிடுவது என்னோட வழக்கம். நண்பர்களின் சதா பூகரும்...)

ஒரு வழியாக அவங்க எல்லாரையும் சம்மதிக்க வைத்தேன்.

“ஒ. கே,  என்னைக்கு வேணும்னாலும் பயணத்துக்கு ரெடியா க இருக்கனும். எப்போ சான்ஸ் கிடைக்குமனு சொல்ல முடியாது..” பஸ் புக்கிங் ஆபீஸ் நண்பன் நினைவு படுத்தினான். எனக்ககோ நூறு முறை சம்மதம்.

ஒரு வாரம் முடிஞ்சிருக்கும், திடீரென்று ஒரு நாள் அந்த நண்பனிடமிருந்து போன் வந்தது.

 “டேய் டிக்கெட் ரெடி.. இன்னைக்கு ஒரு பொண்ணு டிக்கெட் கான்செல் செஞ்சிருக்கு, உனக்கு அது வேணுமா..?

“வேணும், ஆனால் பக்கத்து சீட்ல இருக்கிற பொண்ணு பார்கிறதுக்கு எப்படி..?

நண்பனுக்கு கோபன் பொத்தி கொண்டு வந்தது. “உனக்கு நான் ஐஸ்வர்யா ராய் கொண்டு வந்து பக்கத்தில் உட்கார வைக்கிறேன் போதுமா..?” ஒரு நிமிட நேரத்திற்கு பிறகு. அவன் மீண்டும் தொடர்ந்தான். “டேய், கொஞ்சம் நேரம் போன பிறகு மொத்தமா இருட்டுதானே... நீ அதெல்லாம் கண்டுக்காதே...உனக்கு வேணுமா அதை சொல்லு..” அவன் டிமான்ட் காமிக்க ஆரம்பித்தான். அப்படி அதை ஒரு வழியாக தீர்மானத்தோம்.

அன்றைய தினம் நான் கொஞ்சம் முன்னாலேயே ஆபீசிலிருந்து கிளம்பி வந்தேன். என்னவோ ஒரு சின்ன டென்ஷன் மனதில். எனக்கு ரொம்ப ஒண்ணும் எடுத்து கொள்வதற்கு இல்லை. இருந்தாலும் ஒரு கம்பிளி போர்வையும் முப்ப்ளரும் எடுத்து பையில் வைத்தேன். இனி ஒரு வேளை நம்மோட கஷ்டகாலத்துக்கு பாதிராத்திரியில் பெங்களூர் – சேலம் பாதையில் இறக்கிவிட்டால் காலை வரைக்கும் குளிர்ந்து நடுங்காம மூடி போர்த்திக்கொண்டு இருக்கலாம் இல்லையா. அப்படி நான் ஒரு வழியா என்னை தயார் படுத்திக்கொண்டேன்.

பஸ் புக்கிங் ஆபீசில் வந்த போது கவுன்ட்டரில் இருந்த என் நண்பன் ஒரு பெண்னை பார்த்து சைகை காண்பித்தான். ஹாய் எவ்வளவு அழகான பொண்ணு. இவள் ஹிந்துவா கிறிஸ்டியானா ..? மதம் எதுவானாலும் பரவாயில்லை. பொண்ணு நல்லாயிருந்தால் அதுவே போதும். நான் நினைத்துகொண்டேன்.

இருந்தாலும் பஸ்ஸில் ஏறி அருகில் அமர்ந்தபோது அதுவரை மனதில் சேகரித்து வைத்திருந்த அத்தனை தைரியமும் விஸ்பரின் விளம்பரம் போல காணாமல் போனது.

“கிருஷ்ணா..., என்னுடைய முதல் ராசலீலை அடெம்ப்ட் இது, காப்பாத்துப்பா கடவுளே” , நான் என் பிரியமான தெய்வத்தை மனமுருகி வேண்டி கொண்டேன். (இது முதல் தடவையாயிருக்கும் ஒரு பெண்ணை களங்கபடுத்த ஒருத்தன் கடவுள்கிட்ட உதவியை நாடுவது.)

ஒரே அங்கலாப்பு. மனது அப்படி சஞ்சலப்பட்டு கொண்டிருந்த போதும்  வெளியில் மரியதைராமனாக காட்டிக்கொண்டேன். பஸ் மெதுவாக நீங்க  தொடங்கியது.

கொஞ்சம் நேரம் ஆகியிருக்கும். அந்த பெண்ணோ என் பக்கம் ஒரு தடவை கூட திரும்பி பார்க்கவே இல்லை. நான் என் தொண்டையை சரி செய்வது போல் சத்தம் கொடுத்து பார்த்தேன். முஹும்.., ஒரு பிரயோஜனமும் இல்லை. மீண்டும் சத்தம் கொடுத்து பார்த்தேன். இம்முறை கொஞ்சம் சக்தியோடு.

அதிர்ஷ்டம் என் பக்கம்..! அவள் திரும்பி பார்த்தாள்.

“ஹூம்.. என்ன..?”

“ஏன்.. ஒன்னுமில்லையே..”

அவள் இன்னும் கொஞ்சம் திரும்பி கொண்டாள். நிராசையின் படுகுழியில் நானும்.

“ச்சே.. , நாசமாபோக...” இவள் என்ன நினைத்திருப்பாள்.

இது தான் சொல்லுறது, நம்பளால ஒன்னும் செய்யமுடியாது என்று. பேசாம கைரளி ஹோட்டலில் இருந்து வாங்கி கொண்டு வந்த பொரோட்டாவாவது எடுத்து சாப்பிடலாமா..? வயிற்றுபசி தீயாவது கொஞ்சம் அணையும். நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

கொஞ்சம் நேரம் சென்றது. பஸ் பெங்களூரின் பிராந்த பிரதேசங்களை விட்டு விலகியது. சந்திர கிரணங்கள் அவள் மீது பட, இளந்தென்றல் அவள் சுருள் முடிகளை தழுக, எனக்கு அவள் மென்மேலும் அழகாக தோன்றினாள். காதல் வயப்படக் கூடிய ஒரு சிறந்த சுற்றுசூழல்.

மீண்டும் என் மனதில் காதல் உணர்வுகள் பொங்கி வரத்தொடங்கின. இன்னொரு முறை முயற்சி செய்து பார்த்தால் என்ன..?. நமக்கு நஷ்டம் ஒன்னும் இல்லையே என்று நினைத்தேன்.

“ஹலோ”

அந்த பெண் கேள்வி தோரணையில்...?

“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா..” நான் அவள் அருகில் தூக்கி வைத்திருந்த வாட்டர் பாட்டிலை சுட்டிகான்பித்தேன். அவள் பாட்டிலைi பாஸ் செய்தாள்.

“தாங்க்ஸ்; பேரு என்ன..?”

“நிஷா”

(நல்ல வேளை பதில் பேசுகிறாள். இனி இதுல பிடிச்சு பிடிச்சு ஏறிட வேண்டியது தான். நான் கேட்டு மனப்பாடமக்கிய கதைகளை மனதில் நினைவு கூர்ந்தேன்.)

“என்ன  செய்றிங்க ..; படிக்கிறிங்களா..?”

“ஆமாம்..”

“எங்கே?”

 அவள் காலேஜ் பேரு சொன்னாள்.

“நான் இங்கே ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர்”

 [அக்காலத்தில் நான் எல்லோரிடமும் பெருமையுடன் இதை தெரிவித்து கொண்டிருப்பேன்.]

“அது சரி, என்ன விசேஷம் ஊருக்கு போறீங்க, விடுமுறையா..?”

“இல்லை, எங்க தாத்தா இறந்திட்டாங்க”

“ஐயோ !!!”

அந்த ஒரு நிமிஷத்தில், அவளுடைய தாத்தா இறந்ததுக்கு நான் அவளைவிட அதிகம் துக்கம் அடைந்தேன்.

இனி, இதற்கு பிறகும் நான் எதாவது செய்ய முயற்ச்சித்தால் ரொம்ப நெறிகெட்டவன் ஆகி விடுவேன் என்று எனக்கு தோணியது.

 “எல்லாம் விதி, யாரையும் ஒன்னும் சொல்ல முடியாது.

பெருமூச்சு விட்டுக் கொண்டு நான் அவளிடத்தில் இதை சொல்லும் போது நிஜத்தில் நான் என்னுடைய விதியை தான் பழித்தேன். ச்சே... எல்லாம் சரியா இணைந்து வந்து கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் வேணாம் ஒரு யோகம்.

இனி அடங்கி இருப்பது என்பது முடியாத காரியம். ரொம்ப கஷ்டமும் கூட. பஸ் ஓசூரை வந்தடைந்தவுடன் தாவி குதித்து இறங்கினேன். பக்கத்தில் இருந்த பாரில் நின்ன நில்ப்பில் இரண்டு பெக் வாங்கி அடிச்சேன். எதோ டூப்ளிகேட் சரக்கு போல ...சீட்ல உட்கார்ந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு ; மாயக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் கண் விழித்த போது பக்கத்தில் அவளை காணோம். நான் நேராக வீட்திற்கும் சென்றேன். பெங்களூருக்கு திரும்பி வரும்போது தான் பிரச்சனை ; நண்பர்கள் எல்லாம் கதை கேட்பதற்காக காத்திருப்பார்களே என்று நினைவிற்கு வந்தது.

ஒரு பொய்i கதையை உருவாக்கி நமது மானத்தை காப்பாற்றுவோம். அப்படி நினைத்து நான் திரும்பி சென்றேன்.

காலையில் வந்தவுடன் வேலைக்கு சென்றேன். சாயங்கால நேரம் ரூமிற்கு வந்த போது நண்பர்கள் எல்லாரும் எதிர்ப்பார்ப்புடன்  உட்கார்ந்து இருக்கிறார்கள் கதை கேட்பதற்க்கு.

எதுவானாலும் ஒரு பாட்டிலை திறந்து தொடங்கலாம் என்று தீருமானித்தேன். ஆனால் ஒரு பெக் உள்ளே சென்றதும்  என்னுள் மனமாற்றம் ஏற்பட்டது, எதுக்கு வீணாக பொய்க்கதை எல்லாம் சொல்லி என்னையே ஏமாத்திக்கனும்; இருக்கிற உண்மையை சொல்லிடலாம் என்று நினைத்தேன்.

அப்படி நான் விஷயத்தை சொல்லி முடிச்சதும் டிராவல் எஜென்சி நண்பன் நிறுத்தாமல் வாய் விட்டு சிரிக்க தொடங்கினான்.

“டேய் மடையா உன்னை அவள் நல்லா  எமாத்திட்டாள்.” என்று சொன்னான்.

“என்ன...; எப்படி எப்படி..?” நான் கேட்டேன்.

“மரணம் தெரிந்து போற யாராவது ஒரு வாரம் முன்னாடியே பஸ் புக் செய்வாங்களா...?”

அப்போது தான் எனக்கு க்ளிக்க்கானது...!!!  அடி பாவி.... இவ்வளவு ப்ளான் செய்த எனக்கே நீ பொட்டு வச்சுட்டியே.

ஆனாலும் சில நேரங்களில் இந்த சம்ப்பவத்தை  நினைத்து பார்க்கும்போது எனக்கு அவள் மீது கொஞ்சம் மதிப்பும் ஏற்படும்.

இருப்பினும் ஒரு விஷயம்  மட்டும்  எனக்கு புரியாமல் இருந்தது. அவள் எப்படி அதை கண்டுபிடித்தாள், என்னுடைய நோக்கம் இதுதான் என்று, நான் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன் ஆக தானே அவளிடம் பழகினேன்.

அல்லது அதோ இனி பெண்மணிகளுக்கு ஏதாவது உள்ளார்ந்த திறமை இருக்குமா என்ன ...??? நம்மை போன்றவர்களின் தனி குணம் அறிவதற்கு...!!!

                          *******************
Hi Friends, I have written 22 similar funny stories and made it as a free android app. These stories are written to pass boredom during travel or on free time.  If you like this story please download the app from google store . Click the below app Link to go to the store. 

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



Friday, December 16, 2016

முதல் இன்டர்வியு


நான் தும்கூரில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கின்ற காலம். அனைவரையும் போல் நானும் வேலையை குறித்து நினைக்க தொடங்கினேன்.


எங்களுடைய காலேஜில் கேம்பஸ் இன்டர்வியு என்ற ஏற்பாடு இல்லாததினாலும், இனி ஒரு வேளை இருந்திருந்தாலும் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த செகண்டு கிளாஸ் கம்பெனிகளுக்கு போதாததினாலும் நான் கேம்பஸ் இன்டர்வியுவிகளை வெருக்கவும், சுயமாக வேலை தேடி பிடிப்பதற்கு முடிவு எடுக்கவும் செய்தேன்.  

கம்முயுனிக்கேஷன் நெட்வொர்க்ஸ், சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் துடங்கிய பேபர்கள் என்றைக்கும் என்னுடைய தொடமுடியாத எவெரஸ்ட் மலையாக இருந்தாலும் கூட நான் என்னுடைய டெலிகம்முயுனிக்கேஷன் பிரிவினை நேசித்தேன். கம்ப்யூட்டர் பிரிவிடம் எனக்கு இகழ்ச்சி தான் இருந்தது அன்று. (இன்று சோறு போடுவது கம்ப்யூட்டர் தான் என்றாலும்).

பத்தும் இருவதும் பேக் பேப்பர்ஸ் சேகரிப்புடன் இன்ஜினியரிங் முடிந்தும் காலேஜில் தினமும் வருகின்ற சீனீயர்ஸ் தருகின்ற வெளியுலகின் அறிவை வைத்து “நமக்கெல்லாம் வேலை கிடச்ச மாதிரிதான்...” என்பது போன்ற கருத்தை வேலையை பற்றி நாங்கள் ஏற்றுகொண்டிருந்தோம். இருபின்னும் முயற்சிப்பதில் என்ன தவறு...?

என்னவானாலும் என்னுடைய இறுதி ஆண்டு பரிட்சை முடிந்த அடுத்த நாள், டைம்ஸ் ஓப் இந்தியாவின் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நான் பார்க்க தொடங்கினேன். நாசமா போக., எல்லாம் சாப்ட்வேர் வேலை தான், ‘சி லாங்குவேஜ் லேப்’ பாசாவதற்கு படிச்சது போல நான் ஜென்மத்தில மனப்பாடம் செய்து படித்ததில்லை. அப்படி செய்தும் எக்ஸாமினரின் கையும் காலும் பிடிக்க வேண்டியதாயிடுச்சு.

 நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன், “ஒரு யுவ டெலிகம்முயுனிக்கேஷன் இன்ஜினியரை இந்த நாட்டிற்கு தேவையில்லையா கடவுளே...” இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் பழைய பேப்பர்களை எல்லாம் எடுத்து மீண்டும் பார்க்க தொடங்கினேன். ஆஹா...! தோ கிடக்கிறது நான் தேடி கொண்டிருந்த்தது...!!!

மேக்ஸ் டெலிகாம் ரிக்குயர் சேல்ஸ் ரேப்பிரசன்டேடிவ்ஸ் என்று விளம்பரத்தில் எழுதியிருந்தது. வேலை என்ன என்பதைவிட விளம்பரத்தில் டெலிகாம் என்ற வார்த்தை என்னை பெரிதும் கவர்ந்தது. நல்லது, அப்போ டெலிகம்முயுனிக்கேஷனுக்கும் எதிர்காலம் உண்டு. ஆனால் ஒரு பிரச்சனை, இன்டர்வியு டேட் ஒரு நாள் முன்பே முடிந்து விட்டிருந்தது.

இருந்தாலும் பரவாயில்லை, கிடைத்த இந்த வாய்ப்பை கைவிடாமல் பிடித்து கொள்ளவே நான் தீருமானித்தேன். இண்டர்வியு  கிடைத்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் போன் செய்து தெரிவித்தேன். (கம்பெனி என்னை கூப்பிடவும் இல்லை; சொல்லவுமில்லை, அது வேற விஷயம்.)

படித்து முடித்த கையோடு இண்டர்வியு கிடைத்ததில் பெற்றோர்கள் ரொம்பவும் சந்தோஷம் அடைந்தனர். அந்த சந்தோஷம் இறங்கும் முன்பே நான் 2000 ரூபாய் எடுத்து கொள்வதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டேன், புதிய இண்டர்வியு ஷர்ட்டும், பேண்ட்டும், ஷூவும் எல்லாம் வாங்குவதற்கு..!

அதன் பின் உள்ள என்னுடைய இரண்டு நாட்களுமே தயார்படுத்திக் கொள்வதிலாக இருந்தது. நாலு வருஷத்தின் டெலிக்கோம் சப்ஜெக்ட்ஸ் எல்லாம் மீண்டும் மறித்து பார்த்தேன், கீ பாயிண்ட்ஸ் நோட் செய்து கொண்டேன். முந்தைய நாள் இரவில் நான் கண்ணாடி முன்பாக நின்று கொண்டு இண்டர்வியு பயிற்சியும் செய்து, திருப்தியடைந்தேன்.

அடுத்த நாள் காலையில் ரிச்மண்ட் ரோட்டில் உள்ள ஆபீஸில் நான் 9:30க்கே  வந்தடைந்தேன். முற்றிலும் நவீனமான ஆபீஸ் செட்-அப், என்னுடைய வருங்கால ஆபீசைக் கண்டு எனக்கு புல்லரித்து போனது. ரொம்ப பிசியாக இருந்த ரிச்ப்ஷனிஷ்டிடம் பணிவாக இண்டர்வியு விஷயத்தை சொன்னேன்.

அத்துடன் 2  நாட்கள் முன்பே இண்டர்வியு டேட்  முடிந்த  விஷயமும்..!

கிளி மொழி கூறியது, “இப் யு வான்ட் டு அட்டென்ட் டுடே யு கேன்.” எனக்கு என்னுடைய சீனீயர்ஸினை சவுக்கடி அடிக்கலாம் போல் இருந்தது...! துரோகிகள், இவ்வளவு டிமாண்ட் இண்டஸ்ட்ரியில் இருக்கும்போது தான் நம்மை அவர்கள் தவறாக புரிந்துகொள்ள வைத்தனர்.

அவள் இண்டர்வியு நடக்கும் ஆபீஸின் அட்ரஸை தந்தாள், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வாழ்க்கையில் முதல் இண்டர்வியு சந்திப்பதற்கு அந்த ஆபீஸை நோக்கி நான் நேரே விரைந்தேன்.....

அங்கெ நான்கு  பேர் காத்திருந்தனர் இண்டர்வியுவிற்காக. ரூமிலிருந்த ஆக்சிஜன் அனைத்தையும் இழுத்தெடுத்து கொண்டவாராக உட்கார்ந்திருந்தனர் அவர்கள். முதலில் கொஞ்சம் கௌரவம் காண்பித்தாலும் என்னுடைய ஒப்போனென்ட்சை அறிமுகபடுத்திக் கொள்ளவே நான் தீருமானித்தேன்.

இரண்டு பேர் தமிழர்கள், எம்.பி.ஏ முடித்து என்னை போல அவர்களுக்கும் இது முதல் இண்டர்வியு. அடுத்தவன் டிகிரி, ஆனால் கொஞ்சம் சேல்ஸ் அனுபவம் உண்டு. அனால் நான்காவது நபர்க்கு யாரிடமும் பேச விருப்பமில்லை, பயங்கர தலைகனம். நாங்கள் மூவரும் ஒன்றாக கூட்டம் சேர்ந்து அந்த நான்காவது நபரை குறித்து ரகசியமாக கிண்டல் செய்யத் தொடங்கினோம்.

ரிசெப்ஷனிஷ்ட் எங்களை கடந்து வந்து இன்டர்வியுவிற்கு நேரமாகி விட்டது என்று அறிவித்தாள். என்னுடைய மனதில் பத்மினியும் வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு நடனம் ஆட தொடங்கினர். அது வரை சேகரித்து வைத்த தைரியமெல்லாம் எங்கேயோ கசிந்தது போல்.

முதலில் ஒரு எம்.பி.ஏ காரன் உள்ளே சென்றான். ஒன்று, இரண்டு, மூன்று நிமிடம் முடியவில்லை அவன் வெளியில் வந்தான். அப்புறம், கிரிகெட் விளையாட்டு வீரர் ப்ரெட் லீ, விக்கட் வீழ்த்திய பிறகு செய்வதை போல் கை கொண்டு அக்ஷன் செய்து தன் சந்தோஷத்தை வெளிபடுத்தினான். ரிசல்ட் எங்களுக்கு புரிந்தது. அவனை பாராட்டி அவனுடைய எம்.பி.ஏ. பிரெண்டு உள்ளே சென்றான்.

எனக்கு மின் அதிர்ச்சி அனுபவப்பட்டது. இவ்வளவு சீக்கிரம் செலக்ட் ஆக வேண்டுமென்றால் என்னவாக இருக்கும் இன்வனுடைய திறமை..? உள்ளிலிருந்த பொறாமையும் பதட்டமும் மறைத்து கொண்டு நான் அவனிடம் இண்டர்வியுவை பற்றி விசாரித்தேன். அவன் கேள்விகளை வெளிபடுத்தவில்லை, அதற்கு பதிலாக அவனுடைய காலேஜில் அளிக்கப்பட்ட மோக் இண்டர்வியு ட்ரைனிங்கை பற்றி விவரித்தான். அவனுடைய நண்பன் பாசாவான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் ஐய்யமில்லை.

சத்தியம்.....! மூன்று நிமிடம் முடிந்திருக்க் வாய்ப்பில்லை, அதற்கு முன்பே உள்ளே சென்ற எம்.பி.ஏ.காரன் வெளியில் வந்தான். அவனும் சந்தோஷத்தில் நடனமாடினான். அதற்கு பின் மூன்றாவது வேட்பாளரும் உள்ளே சென்றான்.

என்னுடைய மனதில் பெரும்பறை கொட்ட தொடங்கியது, கடவுளே அடுத்த சுற்று என்னுடையது, போனவர்கள் எல்லாம் 2 – 3 நிமிடங்களுக்கு உள்ளில் பாசாகி ரெகார்ட் போட்டு விட்டார்கள். எல்லாவறையும் கேலி செய்து இனி நான் மட்டும் பாசாகவில்லை என்றால் என்னவாகும் என் அவஸ்த்தை.

பயமும் பதட்டமும் சேர்ந்து கொண்ட காரணத்தால் கையும் காலும் நடுங்க ஆரம்பித்தது. இனி இண்டர்வியுவின் விஷயம் சுவாஹா... தான். அவர்கள் என்னை ஒரு நிமிடத்திற்குள்ளே அடித்து வெளியே துரத்தப் போகிறார்கள்.

இதிலிருந்து தப்பித்து கொள்வதற்கு என்ன வழி...? நான் தீவிரமாக சிந்தித்தேன்.

ஐடியா...! என்னை இண்டர்வியுவர் வெளியேற்றினால் நானும் வெளியே வந்து ப்ரெட் லீயின் அக்ஷனை கடன் வாங்கி ஆரவாரம் செய்வேன். வெளியில் செலக்டாகி நிற்கின்ற மச்சான்களுக்கு விஷயம் தெரியும் முன்பு பெங்களூரு மாநகரத்திற்குள் மூழ்கிவிட வேண்டியது தான்.

இதோ மூன்றாவது சென்றவனும் வந்துவிட்டான், உதட்டில் புன்னகையுடன். நான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து இயந்திரத்தனமாக இண்டர்வியு போர்டை நோக்கி நடந்தேன். தூக்கிலிட போகும் கைதிகளின் அதே மனநிலையுடன். நனைந்த கோழியை போன்று அமர்ந்திருக்கும் என்னிடம் அவர் கேள்வி கேட்க தொடங்கினார்.

இண்டர்வியுவர் : “இந்த வேலையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன...?”

நான் எனக்கு டெலிகம்முனிக்கேஷன் பீல்டில் உள்ள ஈர்ப்பு, படித்த பீல்டிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை போன்று ஒன்றிரண்டு காரணங்களை திக்கி திக்கி அவரிடம் சொல்லி வைத்தேன்.

இண்டர்வியுவர் : “இது உன்னுடைய முதல் இண்டர்வியு தானே..? ”

நான் ; “ஆமாம்!!”

இண்டர்வியுவர் தலையை சரித்து என்னை பார்த்து ஒரு புன்சிரிப்பு அளித்தார். எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.....????

அவர் சொன்னார், “யெஸ், யு ஆர் செலக்டெடு.”

ஏழாம் சொர்கம் பிடித்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது எனக்கு அந்நிமிஷங்களில்.....!!!!!

மகிழ்ச்சியுடன் திரும்பி நம்ம மச்சான்களுடன் சந்தோஷம் பங்கு வைக்கும் போது நான்காவது சென்றவனும் வேலை கிடைத்து வந்திருந்தான். இனி அவனிடம் மட்டும் இடைவெளி வைப்பது ஏன்...? எல்லோரும் சக பணியாளர்கள் அல்லவா. நங்கள் நான்காவது நபரையும் அருகில் அழைத்து அறிமுகம் செய்து கொண்டோம்.

இரண்டு புதிய எம்.பி.ஏ. காரர்களையும் ஒரு யுவ இன்ஜினியரையும் முட்டாள்கள் ஆக்குகின்ற அவனுடைய குவாலிபிக்கேஷன் அறிக்கை வந்தது தீடிரென்று தான். பையன் பத்தாம் கிளாஸ் பாசாகவில்லை..!!

நாங்கள் என்ன சொல்வதென்று அறியாமல் வாய் பிளந்து நின்ற போது ரிசெப்ஷனிஸ்ட் எங்களை உள்ளே அழைத்தார். சேல்ஸ் லீடரை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக!.

                                             ******************
ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 20 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



Wednesday, December 14, 2016

ஆங்கிலம் இலக்கணமும் நானும்


பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு மிகவும் கடினமான விஷயம் ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் தான். ஆனால் இப்பொழுது நிலைமை எதிர் மாறாகிவிட்டது, ஆங்கிலதினால் எனக்கு இல்லை கஷ்டப்பாடு, பாக்கி உள்ளவர்களுக்கு தான்.

என்னை பொருத்த வரையில் இந்த மொழியுடைய ஒரு முக்கியமான குறை என்னவென்றால் அதை உபயோகபடுத்தும் போது நல்ல சொல்லகராதி மட்டும் இருந்தால் போதாது அதன் உச்சாரண முறையும் கைதேர்ந்து இருக்க வேண்டும். உச்சரிப்பு சரியில்லை எனில் சுற்றியுள்ளவர்கள் நமக்கு மொழியை பற்றிய அறிவின் மதிப்பை கொடுக்க மாட்டார்கள்.

நான் மேல் சொன்னது போல் இந்த மொழியை பேசும் போது மட்டுமல்ல கற்றுகொள்ளும் போதும் சிறிதல்ல மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் நான் ஸ்கூல் படிக்கும் போது  என் வீட்டின் அருகில் உள்ள ‘சுப்ரமணியன் வாத்தியார்” என்றவரிடம் ஆங்கிலேயம் டியூஷன் கிளாஸ்க்கு சென்றேன்.

இவருடைய கற்பிக்கும் முறை சற்று வித்தியாசமானது. சாதரணமாக அவர் வகுப்பில் அதிகம்  பேச மாட்டார். அவர் வந்தவுடன் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு ஆங்கில இலக்கண வினாத்தாள் விநியோகம் செய்வார். எல்லா தாளிலும் ‘பாஸ்ட் கண்டினுயஸ்”, “ப்யுச்சர் பெர்பெக்ட் கண்டினுயஸ்” போன்று வாயில் ந்ழையாத படிக்கான காலங்கள் இருக்கும்.

மாணவர்கள் அவரவர்க்கு தோன்றியது போல் பதில் எழுதி முடித்ததும் ஆசிரியர் சரியான பதில்களை உரக்க சொல்வார். அவ்வளவு தான்.

மாணவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ என்பதை பற்றி அவருக்கு கவலை இல்லை. என்றும் சிம்பிள் இங்கிலீஷின் பிரதிநிதியாக இருந்த எனக்கு இந்த டியூஷன் கொண்டு ஒரு பிரயோஜனமும் கிடைக்கவில்லை.
இப்படி எல்லாம் இருந்தாலும் நான் சுப்ரமணிய வாத்தியாரின் டியூஷன் கிளாஸ் செல்ல விரும்பினேன். முதலாவதாக கேள்வியின் பதில் தவறானாலும் ஆசிரியர் ஒன்றும் சொல்வதில்லை அதைவிட முக்கியம் ஆசிரியர் டியூஷன் பீஸ் ஒரு பொழுதும் கேட்டு வாங்குவதில்லை.

அந்த வாய்ப்பை நான் நன்றாகவே பயன்படுத்த தொடங்கினேன். பணத்தின் தேவை காரணம் வீட்டிலிருந்து முறையாக தந்திருந்த டியூஷன் பீஸ்சை நான் ஓன்று இரண்டு முறை நண்பர்களுடன் மறித்து கொண்டேன். ஆசிரியர் கணக்கு வைபதில்லை என்பதனால் இதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தேன்.

“நிலா இருக்கு என்று நினைத்து உதயம் வரை திருட கூடாது. ” என்று ஒரு பழமொழி  இருக்கு.

எரிச்சலூட்டினால் சாரை பாம்பு கூட கடிக்கும் ” என்றும் ஒரு பழமொழி இருக்கு. என்னுடைய விஷயத்தில் இவ்விரு பழமொழிகளும் ஒன்று சேர்ந்தாற்போல் ஒரு நாள் வந்தது. அன்று ஆசிரியர் வழக்கத்திற்கு மாறாக டியூஷன் வகுப்பில் பேச ஆரம்பித்தார்.

 “பசங்களா நீங்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கியம் கேட்டிருக்கிறிர்களா ? வினாத்தாளில் மல்லுகட்டி கொண்டிருந்த நான் “இது என்ன புதமை ” என்று நினைத்து செவி கூர்ப்பிதேன் . ஆசிரியர் தொடர்ந்தார்....

இவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பதை நினைவுபடுத்தும் வாக்கியம் இது. ஆனால் பெற்றோர்களையும் குருவையும் ஒன்று சேர்த்து ஏமாற்றும் சிலர் இருக்கின்றனர்....  இதோ இவனை போல்..” கடைசி வாக்கியம் சொல்லி முடித்ததும் என்னை நோக்கி விரல் கொண்டு சுட்டி காண்பித்ததும் ஒரே நேரத்தில் தான்.

தர்மசங்கிடத்தில் ஒன்று நெளிய கூட முடியாமல் அந்த டியூஷன் வகுப்பில் நான் மரத்தே போயிவிட்டேன். முன் பெஞ்சில் இருந்த கொலுசுகள் வாய்விட்டு சிரித்தன. முக்காலியில் கட்டி போட்டு அடித்திருக்கலாமே ஆசிரியரே... இதைவிட மேல் !

மானத்திற்கு மிகுந்த அவதூறு சம்பவ்த்ததினால் அதிக காலம்  என்னால் அந்த டியூஷன் கிளாஸ் தொடர முடியவில்லை. பத்தாவது வகுப்பிலே ஆங்கில பாடம் எல்லாம் நான் மனப்பாடம் செய்தே பாசானேன்.

அது போகட்டும், இந்த அவமானத்திற்கு காரணமாவது என்னுடைய செயல் என்று வைப்போம், நம்முடைய  ஆங்கில விவரம்  பொதுமக்கள் முன்பாக வெளிவந்த வேறொரு சம்பவம்  கூட இருக்கு.

பத்தாம் கிளாஸ் முடித்து பி.யு. காலேஜ் குமாரனாக ஆவதற்கு காத்திருந்த காலம். எல்லா ஹோட்டல்களிலும் ஏறி வயிற்றை நிரப்பும் பழக்கமிருந்த காரணத்தினால் வயிற்று வலி என்றும் எனக்கு  ஒரு சகஜமான விருந்தாளியாக இருந்தது. வலி நிரந்தரம் ஆனதும் டாக்டரை காண்பித்து விடலாம் என்று தீர்மானித்தேன்.

டாக்டர் வீட்டில் தான் வைத்தியம்  பார்க்கிறார். என்னுடைய இந்த தரிசனத்தின் பின்னில் இரண்டு உத்தேசங்கள் உள்ளன. வைத்தியரையும் பார்க்கலாம், முடிந்தால் அவரது இளைய மகளையும் பார்க்கலாம். கண்களுக்கு ஒரு குளிர்ச்சி அவ்வளவு தான்.

நான் நன்றாக டிரஸ் செய்து டாக்டரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்,  ஹாலில் சுற்றி பார்த்தேன்.

ம்ஹும்...என் ஆள் இல்லை. சரி வந்த வேலையாவது நடக்கட்டும் என்று நினைத்து டாக்டரின் ரூமில் சென்று அமர்ந்தேன்.

 பரிசோதித்தபின் டாக்டர் சொன்னார், “ ஸ்டூல் டெஸ்ட் நடத்தனும், நாளைக்கு நீ ஸ்டூல் கொண்டு வரனும். ”

எனக்கு ஒரே பதற்றும். வயிற்று வலிக்கும் ஸ்டூலுக்கும் என்ன சம்பந்தம்..? இனி இப்போ ஸ்டூல் மேல் ஏறி நிக்கணுமோ என்னவோ..? அதுக்கு நான் ஏன் தூக்கி எடுத்து கொண்டு வரணும்...? மனதில் குழப்பம் அடைந்த நான், “ வீட்டில் ஸ்டூல் இல்லை டாக்டர்...”

டாக்டர்: “ இன்னைக்கு வேண்டாம்டா...நாளைக்கு போதும்.!”

“ஏன் டாக்டர், இங்கே ஸ்டூல் இல்லையா...?” நான் அப்பாவியாக கேட்டேன்.

டாக்டரூக்கு ரொம்ப கோபம் வந்தது. “இங்கேயுள்ளது கொண்டு என்ன செய்ய...? நீ நாளைக்கு கொண்டு வரியா இல்லையா...?”

நான்: “ அதுக்கில்ல..,  ஸ்டூலுடைய ஒரு கால் ஒடிந்து இருக்கு;    நாற்காலி போதுமா..?”

அப்புறம் நான் பார்க்கும் போது டாக்டர் விழ்ந்து விழுந்து சிரித்து கொண்டு இருக்கிறார். விஷயம் தெரிந்த போது எனக்கு அங்கே இருந்து தப்பித்தால் போதும் என்றாகிவிட்டது.

இனி இந்த  மனுஷன் இதை எல்லாம் வீட்டில் டமாரம் அடித்தால், எப்படி நான் இனி அந்த பெண் முகத்தில் முழிப்பேன் என்பது தான் திரும்பி நடக்கையில் என்னுடைய ஒரே யோசனை.

                                 ************
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason






Monday, December 12, 2016

அந்த ரேடியோ இணைப்பு


ஒரு நாட்டின் இதய துடிப்பு தான் அவ்வூரின் திருவிழா. எங்களுடைய ஊரிலும் இருகின்றது ரொம்ப பிரபலமான கோவில் திருவிழா ஒன்று. அப்படி ஒரு திருவிழா காலத்தில் நடந்த ஒரு கதை தான் இந்த முறை சொல்ல போகிறேன். இதன் நாயகன் அசோக் அண்ணன். சம்பவம் நடக்கும் போது அவர் டிகிரிக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

ஏழு நாட்கள் நீடிக்கும் அந்த திருவிழா. ஊரிலுள்ள  அனைத்து இளைஞர்களுக்கும் முழு சுதந்திரம் தான் அந்நாட்களில். அதாவது இரவில் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் குடும்பத்தினர்  சமாதானபட்டு கொள்வார்கள் அவர்களது மகன் திருவிழா மைதானத்தில் எங்காவது இருப்பான் என்று.

அப்படி நம்முடைய அசோக் அண்ணனும் திருவிழா மைதானத்தில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை தான் திருவிழாவின் முக்கிய ஈர்ப்பு. காரணம் இந்த நேரத்தில் தான் அந்த பிரதேசத்தின் அழகான பெண்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் திருவிழா காண வருவார்கள். ஏன் என்று தெரியவில்லை ஒரு பெண்னை காலேஜில் காண்பதைவிட அழகாக தோன்றுவது, அவளை ஒரு திருவிழாவில் தீபங்களுக்கிடையில் காணும் போது  தான். இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இனி கதைக்கு திரும்ப வருவோம். அப்படி மைதானத்தை சுற்றி நடக்கும் போது தான் அசோக் அண்ணன் காலேஜிலே தன்னுடைய மிக நெருங்கிய நண்பனை காண நேர்ந்தது. இரண்டு பேருக்கும் உற்சாகமானது. பிறகு அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றி திரிய தொடங்கினர்.

கொஞ்சம் நேரமான பிறகு நண்பன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டான். கையில் புட்டி இருக்கு, அடிக்கலாமா..? இதெல்லாம் தானே இந்த நேரத்தின் ஒரு சுகம். திருவிழா நடப்பது ஒரு ஆற்றின் கரையில் தான். அவர்கள் ஆற்றின் ஒரு பாறையின் மீது அமர்ந்து தண்ணியடிக்க தொடங்கினர்.

ஆனால் மது வேறு சில விருப்பங்களை அவர்களின் மனதில் எழுப்பியது. இருவது வயதின் இளமை ரத்தம் கொதிக்கின்ற வயது. பெண் வேண்டுமென்ற நினைப்பு வந்து விட்டது. இதுவரை குறிப்பிடத் தக்க அனுபவம் ஒன்றுமில்லை இருவர்க்கும்.  

இருவரில் சமீபவாசி அசோக் அண்ணன் தான். ஒரு செட்-அப் கேஸின் வீடு தூரத்தில் நின்று நண்பர்கள் காண்பித்து கொடுத்துள்ளார்கள் முன்பு. ஆனால் இரண்டு மூன்று நெல் வயல்கள் கடந்து போக வேண்டும். இந்த நேரங்கெட்ட நேரத்தில் அது தேவையா..?? அசோக் அண்ணன் சற்றே தயங்கினார். ஆனால் நண்பன் வலியுறுத்திக் கொண்டே இருந்தான். ஏதானாலும் போயி பார்க்கலாம், கொஞ்சம் நடந்தது மாதிரியும் ஆச்சு. அப்போதைய ஒரு மூடில் இருவரும் அந்த இடத்திற்கு புறப்பட்டனர்.

நடந்து நடந்து ஒரு விதமாக வீட்டின் அருகில் வந்து சேர்ந்தார்கள். அசோக் அண்ணனுக்கு அந்த அளவுக்கு உறதி ஒன்றுமில்லை வீடு இது தான் என்று. ஒரு வேளை, வீடு மாறி ஏறினால் அப்புறம் திருவிழா முரசொலிக்கப் போவது அவனவனுடைய முதுகில் தான்.

நெஞ்சிடிப்புடன் கதவை தட்டினார். அதிர்ஷ்டம் அவர் பக்கம்..! நினைத்த வீடு தான். செட்-அப் அவர்களை வரவேற்று உள்ளே கொண்டு போனது.

முதலில் யார் செல்வது..??

நண்பர்கள் டோஸ் இட்டனர். அதிர்ஷ்டம் கடாக்ஷம் செய்தது நண்பனுக்கு. அவன் உள்ளே சென்றான். அசோக் அண்ணன் கொஞ்சம் நிராசையுடன் வராந்தாவில் உட்கார்ந்தார்.

நேரம் பாதிராத்திரி ஆனது. உள்ளே சென்றவன் வெளியே வரும் லக்ஷனம் ஏதுமில்லை. அசோக் அண்ணனுக்கோ போர் அடிக்க தொடங்கியது. சுற்றிலும் தேடி பார்த்த போது தான் மூலையில் ஒரு ரேடியோ இருந்ததை கண்டார். அதிகம் ஒன்றும் ஆலோசிக்காமல் அசோக் அண்ணன் அந்த ரேடியோவை ஓன் செய்தார். அந்த நிசப்தமான இரவு வேளையில், ஊர் முழுவதும் நன்கு உறங்கி கிடக்கும் போது செட்-அப்பின் வீட்டில் இருந்து மட்டும் உரக்க ஒரு ஹிந்தி பாடல் முழங்கியது.

“தூ சீஸ் படி யே, மஸ்து, மஸ்து....”

உள்ளே சென்ற நண்பன் மொத்தத்தில் திகைத்து போனான். என்ன இவன் இடம் பொருள் ஏவல் அறியாமல் செய்கின்றான். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினால் என்னவாகும் அவஸ்த்தை. விளைவாக அவன் செய்து கொண்டிருந்த வேலையின் செறிவு தடைபட்டது. அசோகனை கையேடு ஒன்று கொடுப்பதற்காக அவசரத்துடன் அவன் வெளியே தாவினான். ஆனால் வந்தவுடன் ரேடியோவை ஆப் செய்வதற்கு ஓடினான்.

நண்பன் கொஞ்சம் வெளியில் வருவதற்காக காத்திருந்த அசோக் அண்ணன் கிடைத்த மாத்திரத்தில் உள்ளே ஏறி கதவை தாளிட்டார். செட்-அப்பிற்கு ஒரு ட்ரிங்க்ஸ் ப்ரேக்கிற்கு போலும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் ஆரம்ப நடபடிகள் தொடங்கும் போது, செட்-அப் அந்த நேரத்தில் முற்றிலும் தேவையற்ற ஒரு கேள்வியை கேட்டாள்.

 “ஏம்பா, உங்கப்பா (பெயர்) இவரு தானா..?

அசோக் அண்ணனின் அப்போதிய மனோநிலையை வாசகரின் கற்பனைக்கு விடுகிறேன்.....!! மொத்தத்தில் தள்ளாடிய அசோக் அண்ணன் சொன்னார்.

“அமாம், எப்படி புரிஞ்சுது...”

செட்-அப் : “அதுவா..., அவருக்கும் பாதி ராத்திரியில ரேடியோ வைக்கிற பழக்கம் இருந்தது...”

ஆனால் அது கேட்டவுடன் ஆப் ஆனது பாவம் அசோக் அண்ணனின் ரேடியோவும் தான்.
                                      **********
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason