Monday, December 12, 2016

அந்த ரேடியோ இணைப்பு


ஒரு நாட்டின் இதய துடிப்பு தான் அவ்வூரின் திருவிழா. எங்களுடைய ஊரிலும் இருகின்றது ரொம்ப பிரபலமான கோவில் திருவிழா ஒன்று. அப்படி ஒரு திருவிழா காலத்தில் நடந்த ஒரு கதை தான் இந்த முறை சொல்ல போகிறேன். இதன் நாயகன் அசோக் அண்ணன். சம்பவம் நடக்கும் போது அவர் டிகிரிக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

ஏழு நாட்கள் நீடிக்கும் அந்த திருவிழா. ஊரிலுள்ள  அனைத்து இளைஞர்களுக்கும் முழு சுதந்திரம் தான் அந்நாட்களில். அதாவது இரவில் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் குடும்பத்தினர்  சமாதானபட்டு கொள்வார்கள் அவர்களது மகன் திருவிழா மைதானத்தில் எங்காவது இருப்பான் என்று.

அப்படி நம்முடைய அசோக் அண்ணனும் திருவிழா மைதானத்தில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை தான் திருவிழாவின் முக்கிய ஈர்ப்பு. காரணம் இந்த நேரத்தில் தான் அந்த பிரதேசத்தின் அழகான பெண்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் திருவிழா காண வருவார்கள். ஏன் என்று தெரியவில்லை ஒரு பெண்னை காலேஜில் காண்பதைவிட அழகாக தோன்றுவது, அவளை ஒரு திருவிழாவில் தீபங்களுக்கிடையில் காணும் போது  தான். இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இனி கதைக்கு திரும்ப வருவோம். அப்படி மைதானத்தை சுற்றி நடக்கும் போது தான் அசோக் அண்ணன் காலேஜிலே தன்னுடைய மிக நெருங்கிய நண்பனை காண நேர்ந்தது. இரண்டு பேருக்கும் உற்சாகமானது. பிறகு அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றி திரிய தொடங்கினர்.

கொஞ்சம் நேரமான பிறகு நண்பன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டான். கையில் புட்டி இருக்கு, அடிக்கலாமா..? இதெல்லாம் தானே இந்த நேரத்தின் ஒரு சுகம். திருவிழா நடப்பது ஒரு ஆற்றின் கரையில் தான். அவர்கள் ஆற்றின் ஒரு பாறையின் மீது அமர்ந்து தண்ணியடிக்க தொடங்கினர்.

ஆனால் மது வேறு சில விருப்பங்களை அவர்களின் மனதில் எழுப்பியது. இருவது வயதின் இளமை ரத்தம் கொதிக்கின்ற வயது. பெண் வேண்டுமென்ற நினைப்பு வந்து விட்டது. இதுவரை குறிப்பிடத் தக்க அனுபவம் ஒன்றுமில்லை இருவர்க்கும்.  

இருவரில் சமீபவாசி அசோக் அண்ணன் தான். ஒரு செட்-அப் கேஸின் வீடு தூரத்தில் நின்று நண்பர்கள் காண்பித்து கொடுத்துள்ளார்கள் முன்பு. ஆனால் இரண்டு மூன்று நெல் வயல்கள் கடந்து போக வேண்டும். இந்த நேரங்கெட்ட நேரத்தில் அது தேவையா..?? அசோக் அண்ணன் சற்றே தயங்கினார். ஆனால் நண்பன் வலியுறுத்திக் கொண்டே இருந்தான். ஏதானாலும் போயி பார்க்கலாம், கொஞ்சம் நடந்தது மாதிரியும் ஆச்சு. அப்போதைய ஒரு மூடில் இருவரும் அந்த இடத்திற்கு புறப்பட்டனர்.

நடந்து நடந்து ஒரு விதமாக வீட்டின் அருகில் வந்து சேர்ந்தார்கள். அசோக் அண்ணனுக்கு அந்த அளவுக்கு உறதி ஒன்றுமில்லை வீடு இது தான் என்று. ஒரு வேளை, வீடு மாறி ஏறினால் அப்புறம் திருவிழா முரசொலிக்கப் போவது அவனவனுடைய முதுகில் தான்.

நெஞ்சிடிப்புடன் கதவை தட்டினார். அதிர்ஷ்டம் அவர் பக்கம்..! நினைத்த வீடு தான். செட்-அப் அவர்களை வரவேற்று உள்ளே கொண்டு போனது.

முதலில் யார் செல்வது..??

நண்பர்கள் டோஸ் இட்டனர். அதிர்ஷ்டம் கடாக்ஷம் செய்தது நண்பனுக்கு. அவன் உள்ளே சென்றான். அசோக் அண்ணன் கொஞ்சம் நிராசையுடன் வராந்தாவில் உட்கார்ந்தார்.

நேரம் பாதிராத்திரி ஆனது. உள்ளே சென்றவன் வெளியே வரும் லக்ஷனம் ஏதுமில்லை. அசோக் அண்ணனுக்கோ போர் அடிக்க தொடங்கியது. சுற்றிலும் தேடி பார்த்த போது தான் மூலையில் ஒரு ரேடியோ இருந்ததை கண்டார். அதிகம் ஒன்றும் ஆலோசிக்காமல் அசோக் அண்ணன் அந்த ரேடியோவை ஓன் செய்தார். அந்த நிசப்தமான இரவு வேளையில், ஊர் முழுவதும் நன்கு உறங்கி கிடக்கும் போது செட்-அப்பின் வீட்டில் இருந்து மட்டும் உரக்க ஒரு ஹிந்தி பாடல் முழங்கியது.

“தூ சீஸ் படி யே, மஸ்து, மஸ்து....”

உள்ளே சென்ற நண்பன் மொத்தத்தில் திகைத்து போனான். என்ன இவன் இடம் பொருள் ஏவல் அறியாமல் செய்கின்றான். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினால் என்னவாகும் அவஸ்த்தை. விளைவாக அவன் செய்து கொண்டிருந்த வேலையின் செறிவு தடைபட்டது. அசோகனை கையேடு ஒன்று கொடுப்பதற்காக அவசரத்துடன் அவன் வெளியே தாவினான். ஆனால் வந்தவுடன் ரேடியோவை ஆப் செய்வதற்கு ஓடினான்.

நண்பன் கொஞ்சம் வெளியில் வருவதற்காக காத்திருந்த அசோக் அண்ணன் கிடைத்த மாத்திரத்தில் உள்ளே ஏறி கதவை தாளிட்டார். செட்-அப்பிற்கு ஒரு ட்ரிங்க்ஸ் ப்ரேக்கிற்கு போலும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் ஆரம்ப நடபடிகள் தொடங்கும் போது, செட்-அப் அந்த நேரத்தில் முற்றிலும் தேவையற்ற ஒரு கேள்வியை கேட்டாள்.

 “ஏம்பா, உங்கப்பா (பெயர்) இவரு தானா..?

அசோக் அண்ணனின் அப்போதிய மனோநிலையை வாசகரின் கற்பனைக்கு விடுகிறேன்.....!! மொத்தத்தில் தள்ளாடிய அசோக் அண்ணன் சொன்னார்.

“அமாம், எப்படி புரிஞ்சுது...”

செட்-அப் : “அதுவா..., அவருக்கும் பாதி ராத்திரியில ரேடியோ வைக்கிற பழக்கம் இருந்தது...”

ஆனால் அது கேட்டவுடன் ஆப் ஆனது பாவம் அசோக் அண்ணனின் ரேடியோவும் தான்.
                                      **********
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



1 comment:

  1. "எது திறமை?"
    https://www.youtube.com/watch?v=3gAZm4fdL68
    ஒரு நிறுவனம் எப்படிப்பட்ட திறமைசாலிகளை தன் ஊழியர்களாக நியமிக்க ஆசைப்படும் என்பதற்கான உதாரணம்.

    ReplyDelete